பாலஸ்தீனத்தை கடுமையாக தாக்கி வரும் இஸ்ரேல், ஏற்கெனவே அங்கு பணிபுரிந்து வரும் பாலஸ்தீன தொழிலாளர்க ளை வெளியேற்றியுள்ளது. அவர்களுக்கு பதிலாக இஸ்ரேலில் கட்டுமான வேலைகள் உட்பட பல்வேறு பணிகளுக்காக ஆயிரக் கணக்கான இந்தியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதாக மோடி அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. பாலஸ்தீன தொழிலாளர்களை காவு கொடுத்து இந்தியத் தொழிலாளர்களை அவர்களுக்கு எதிராக நிறுத்தும் இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பாலஸ்தீன மக்களுடன் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் கரம் கோர்த்து நிற்கிறது என இந்தியாவின் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு குரல் எழுப்பியுள்ளன. மோடி அரசு, இந்தியாவில் வேலைகளை உருவாக்கு, இஸ்ரேலில் இனப் படுகொலைக்கு துணை போகாதே.